எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் மாநாடு
எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர் கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இவ்வமைப்பின் முதல் மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க ஈரோடு மாவட்ட முதல் மாநாடு புதனன்று ஈரோடு கூடலிங் கம் திடலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயசுகி தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் தமிழ்ச்செல்வி அறிக்கையும், பொரு ளாளர் அர்னால்டு பிரவுன் வரவு-செலவு அறிக்கையும் முன்வைத்தனர். சங்கத் தின் மாநிலத் தலைவர் சசிகலா சிறப்பு ரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜய் மனோ கரன் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சீனி வாசன் நிறைவுரையாற்றினார். இதில், தொகுப்பூதிய, கான்ட்ராக்ட் பணி நியமன முறையை கைவிட்டு நிரந்தர, காலமுறை ஊதியத்தில் நிய மிக்க வேண்டும். எம்ஆர்பி தொகுப்பூ திய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நிரந்தர பணியிடங் கள் உருவாக்கிட வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செவி லியர் கல்லூரி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில், தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஜா.ஜெய சுகி, செயலாளராக ம.தமிழ்செல்வி, பொருளாளராக வே.அர்னால்டுபிர வுன், உதவித்தலைவராக பொ.கோச லைரமணி, உதவிச்செயலாளராக ம. வெங்கடேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், தமிழ் செல்வி நன்றி கூறினார்.