போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
தருமபுரி, ஜூன் 7- பாலக்கோடு நகரில் போக் குவரத்து நெரிசலால் வாக னங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளதால், போக்கு வரத்து நெரிசலை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டு மென, வாகன ஓட்டிகள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒசூர், மாரண்டஹள்ளி, அஞ் செட்டி, பெங்களூரு, சென்னை மற்றும் தரும புரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பகுதி களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் இயங்கும் வணிக கடைகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், சாலையில் வாகனங் கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படு கிறது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிச்சல், போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவ சர ஊர்திகள் செல்வது பெரும் சிரமம் உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருவதாகவும், அதி காரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவ டிக்கை மேற்கொண்டு, போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.