tamilnadu

img

ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைப்போராளி ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் கோவையில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை குனியமுத்தூர் ஏ.ஆர்.பேக்கரி அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கோவை மாவட்ட தலைவர் முகமது முசீர் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெரோம்ரோட்டரிக், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்திட்ட ஸ்டான் சுவாமியை பொய் வழக்கில் கைது செய்து சிறையிலேயே மரணத்திற்கு வித்திட்ட ஒன்றிய அரசை கண்டித்தும், ஸ்டான் சுவாமி மரணத்திற்கு நீதிவேண்டும். லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்காதே, சிஏஏ, என்ஆர்சி, போன்ற மக்கள் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். காஷ்மீர் மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும். பாஜகவின் மதவெறி அரசியல் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கருப்பு முக கவசம் அணிந்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

;