ஏழை மக்களை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட் டத்தில் நுண்நிதி நிறுவனங்களால் கடன் பெற்ற ஏழை எளிய மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பேட்டை காளிபாளை யத்தைச் சேர்ந்த விதவைப் பெண் மகேஸ்வரி (வயது 46) வேலைக்கு போய்விட்டு வந்தவர் யாருக்கும் தெரி யாமல் விஷ மருந்து உட்கொண்டார். அவரே விஷம் அருந்தியதைச் சொன்ன பிறகுதான் உறவினர்கள் அவசரமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்கு திருப்பூர் மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 5ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார். இந்த சோகம் நடந்தேறிய நிலை யில், காவல் துறையில் சரியான பிரிவில் வழக்கு பதிய பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் வலுவாக அழுத்தம் அளித்த பிறகு, முதல் தகவல் அறிக்கை 61/2025 பதிவு செய்யப்பட் டது. பின் அதை மாற்றி பி.என்.எஸ். 108 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வசூல் முகவர் (கலெக்சன் ஏஜென்ட்) விஜயகு மார் என்பவரைக் கைது செய்தனர். இருப்பினும் எஸ்சி., எஸ்.டி., வன் கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். மீண் டும் காவல்துறை மேல் அதிகாரியின் கவ னத்திற்கு கொண்டு சென்று எஸ்சி., எஸ்டி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனுக்கள் அனுப்பப்பட் டுள்ளது. அவமானப்படுத்தும் குரூர மனநிலை இந்த ஒரு வழக்கில் கடும் போராட் டம் நடத்திய நிலையில், தாராபுரம் வட் டம் குண்டடம் ஒன்றியம் அங்கன்வாடி யில் பணிபுரியும் காமாட்சி (பெயர் மாற் றம் செய்யப்பட்டுள்ளது.) ரூ.75 ஆயிரம் கடன் பெற்று மாதம் இருமுறை ரூ.1500 வீதம் கடனை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கணவர் வீட்டை விட்டு சென்றதால், தற்சமயம் கடன் தவணை கட்ட முடியா மல் மாதம் ஒருமுறை கட்டுகிறேன் என்று வேண்டியிருக்கிறார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள், அதை ஏற்காமல், அவர் வேலை செய்யும் பணியிடத்திற்கு சென்று பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. உங் களை கேவலப்படுத்துவதுதான் எங்கள் வேலை என்று சொல்லி இருக்கின்ற னர். சொன்னதோடு விடாமல், அங்கு இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரி யரிடம் அவர் கடன் கட்டவில்லை என்ற விவரத்தை சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இரு சக்கர வாகனம் மூல மாக, அவரைப் பின்தொடர்ந்து சென்று, கெட்ட வார்த்தைகளை பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த தகவலைக் கேள்விப்பட்டு மார்க் சிஸ்ட் கட்சியினர் நேரடியாகத் தலை யிட்டனர். கட்சி தலையிட்ட பிறகு, நீங் கள் ஏன் கட்சிக்கு செல்கிறீர்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டி ருக்கின்றனர். கடனுக்கு ஈடாக காப்பீடு குண்டடம் ஒன்றியம் இடையன்கி ணறு என்ற கிராமத்தில் வீட்டுபட்டாவை வைத்து சேகர் என்பவர் தன் மனைவி யின் பெயரில் பயிர் கடன் பெற்றிருக் கிறார். உடல்நலம் குன்றி அவர் மரணம் அடைந்துவிட்டார் மரணமடைந்தால் கடன் பணம் செலுத்த வேண்டிய தில்லை. அதற்குண்டான காப்பீடு செய் யப்பட்டுள்ளது. காப்பீடு செய்யப்பட்டா லும் அதன் பிரிமியம், காப்பீட்டுத் தொகை போன்ற விவரங்கள் மனுதார ருக்குத் தருவதில்லை. தற்சமயம் அவ ரது கணவர் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி கடன் கொடுத்த நிறுவ னத்தார் சேகரை நிர்பந்தம் செய்து வரு கிறார்கள். அவர் செய்வதறியாது, தாராபுரம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து முறையிட்டிருக்கிறார். கட்சியிலி ருந்து தலையிட்டு பேசி நுண்நிதி நிறு வனத்தினர் தொந்தரவு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வீட்டை பூட்டுவோம் என்று மிரட்டுகி றார்கள். வீட்டைப் பூட்டினால் பூட்டை உடைப்போம் என்று மனுதாரர் தரப்பில் பதில் சொல்லப்பட்டது இப்படிப்பட்ட மோசமான நிலைமைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. வறுமையில் தவிக்கும் ஏழைகளை வஞ்சிக்கலாமா? இப்படி தாராபுரம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நுண்நிதி கடன் மூலம் ஏகப்பட்ட குடும்பங்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு நான்கு லோன் தருவது, கடன் தர மதிப்பீடு (சிபில்ஸ்கோர்) எவ்வ ளவு என்பதைக் கூட பார்ப்பதில்லை. நுண்நிதி நிறுவனத்தினரே மக்களிடம் நேரில் சென்று லோன் தருகிறோம் என்று கிராமத்தில் உள்ள தெருக்களில் விளம் பர பலகை வைப்பது போன்ற நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் கொடுத்துள்ளோம் கொடுத்த கடன் பணம் பெற்றால் சரி என்று நிலை யோடு பிரச்சனையை அணுகுவ தில்லை கடன் வாங்கியோர்கடன் தவணை கட்டவில்லை என்றால் அவர் களை அவமானப்படுத்த வேண்டும், கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே மேலோங்கி உள்ளது. கிராமங்களில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வேலை இல் லாத நிலைமையில் தவித்து வருகின்ற னர். கடும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் அன்றாடம் பாதிப்புக் குள்ளான மக்கள் வாழ்க்கை நடத்தவே போராடி வருகின்றனர். தங்கள் கஷ்டத்துக்கு இடையே பெரும் கடன்க ளால் திரும்பிச் செலுத்த முடியாமல் சிர மப்படுகின்றனர். இவர்களை அவமா னப்படுத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துக! எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த நுண்நிதி நிறுவனங்க ளின் அராஜகப் போக்கை கட்டுப்படுத்த வேண்டும். தான்தோன்றித்தனமாக அப்பாவி மக்களை அவமானப்படுத்தி அவர்களில் பலரைத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள் ளக்கூடிய நிறுவனங்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு கடன் கொடுப்பதற்கு உரிய வரையறை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்ப நுண்நிதி நிறுவங்களிடம் விதிகளை உருவாக்க வேண்டும். கடன் தவணை வசூலிக்கச் செல்லும் பணியாளர்க ளுக்கு உரிய வழிகாட்டுதல் இருக்க வேண்டும். கடன்தாரர்களை அவமா னப்படுத்துவது, கேவலப்படுத்துவது போன்ற அணுகுமுறைகளை முற்றாக தடை செய்ய வேண் டும். காப்பீடு வழங்கும் நிறுவன விவ ரங்களை கடன் பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்றிருக்கும் பாலிசி சான்று களை உடனடியாக வழங்க வேண்டும். வீட்டைப் பூட்டுவது போன்ற அரா ஜகமான செயல்களைத் தடுக்க சட்டப் படி உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.