கோவை பா.ஜ.க அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்துக்கு நேற்று மாலை இளைஞர் ஒருவர் நுழைந்து உள்பக்கமாக தாழிட முயன்றதாக கூறப்படுகிறது. அலுவலகத்திலிருந்த உதவியாளர் ஒருவர், அந்த இளைஞரை வெளியே தள்ளியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அண்ணா சிலை சிக்னல் அருகே சாலையில் சடலமாக இருக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்தின் உள்ளே மற்றும் வெளிப்புறத்திலிருந்த பொருத்தப்பட்ட சிசிடிவியை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.