tamilnadu

img

மதுரை-பழனி-கோயம்புத்தூர் ரயில் சேவை ‘தீபாவளிப்பரிசு’

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி

மதுரை, அக்.25-  மதுரை-பழனி-கோயம்புத்தூர் வழித்தடத்தில் மதுரை மக்களின் கோரிக்கையை ஏற்று 15 ஆண்டு களுக்குப் பிறகு பயணிகள் ரயில் இயங்கத் தொடங்கியுள்ளது. இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள தீபாவளிப் பரிசு என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். மதுரையில் வெள்ளியன்று அவர் செய்தியாளர்களை அழைத்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை-பழனி-கோயம்புத்தூர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டுமென கடந்த 27.8.2019 அன்று மதுரை கோட்ட மேலாளருடன் விவாதித்ததன் அடிப்படையில் தற்போது இந்த பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது மதுரை மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தீபாவளிப் பரிசுமாகும். மதுரை-கோயம்புத்தூர் இடையே புதிதாக விரைவு ரயில் இயக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நிறைவேறும். இரண்டாவது ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. பணிகள் நிறை வடைந்தவுடன் தூத்துக்குடி-கோயம் புத்தூர், செங்கோட்டை-கோயம்புத்தூர் இடையே பயணிகள் ரயில் இயக்க நடவடிக்க எடுக்கப்படும்.

மதுரை கூடல்நகர் ரயில் நிலை யத்தை மேம்படுத்துவதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். டிசம்பர் மாதத்தில் மதுரை-போடி அகலரயில் பாதையில் உசிலம்பட்டி வரை பயணிகள் ரயில் இயக்கப்படும். மதுரை-சென்னை இடையே ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணி களுக்காக ரூ.150 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த நிதியைக் கொண்டு ரயில் பாதையை பராமரித்திருந்தால் மதுரை-சென்னைக்கு 4.30 மணி நேரத்தில் வந்துவிடலாம். தேஜஸ் ரயில் இரண்டு முறை இயக்கு வதற்கான வாய்ப்பு ஏற்படும். ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கும் அடுத்த கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தப்படும். மதுரை-சென்னை வழித்தடத்தில் இயங்கி வரும் தேஜஸ் ரயிலை ‘மதுரை தமிழ்சங்க ரயில்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

27.8.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மதுரை ரயில் நிலையத்தில் மருந்தகம், நடைமேடை பயணச்சீட்டு சேவை முகப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் பயணி களை இறக்கி ஏற்றுவதற்கு செல்லும் வாகனங்கள் ஆறு நிமிடங்கள் ரயில்வே வளாகத்தில் கட்டணமின்றி நிற்கலாம். சேம்பர் ஆப் காமர்ஸ் அமைத்த மீன் சின்னம் மதுரை ரயில்நிலையத்தின் முகப்புப் பகுதியில் வெகுவிரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மதுரை யில் டெங்கு, வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.