tamilnadu

img

ஈஷா மருத்துவர் போக்சோ வழக்கில் கைது!

ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சரவண மூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவக் குழுவில் மருத்துவராக இருக்கும் சரவண மூர்த்தி என்பவர் மீது அப்பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக வந்த குழந்தைகள் நலத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சரவண மூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.