கோவை, மேட்டுப்பாளையத்தில் இதுவரை 56 பள்ளிகளின் 393 பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ஜூன் மாதம் 1 ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்விற்கு உடபடுத்தப்பட்டு வருகிறது.
.மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளின் இயங்கி வரும் 393 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர்..இது குறித்து அதிகாரிகள் கூறும் பொழுது, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா எனவும் முதலுதவி பெட்டி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்..மேலும் பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் பத்தாண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும், ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், நகர் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பள்ளி பேருந்துகளை இயக்க வேண்டும், மாணவர்கள் காலையில் வாகனத்தில் ஏறும் போதும் மாலையில் வாகனத்தில் இருந்து இறங்கும் போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் வாகன உதவியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்..திடீர் தீவிபத்து ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்..