கோவை, ஏப்.15 -
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் 2140 பேருக்கு பரிசோதனை செய்ததில் 126 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நோய்தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தும் பணியும், வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. கோவையில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வியாழன் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும். கோவையில் கொரோனா நோய் கட்டுப்பட ,பொது மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
15 நாட்கள் கட்டுப்பாடாக இருந்து விட்டால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த
மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
கோவையில் அரசு மருத்துவமனை முதுகலை மருத்துவமாணவர்கள் போதிய வசதிகள் இல்லாமல் அவதிபடுவது குறித்த கேள்விக்கு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம்.
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பெரிய ஓட்டல்களில் ரூம் போட சொல்லி இருக்கின்றோம் அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட இருக்கின்றனர்.
முதுகலை மருத்துவ மாணவர்களை கவனமாக இருக்க சொல்லி இருக்கின்றோம். கோவையில் என்.95 முக கவசம் தேவையான அளவு இருக்கின்றது.
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தரமான உணவு கொடுக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.