tamilnadu

img

பெரியார் சிலை அவமதிப்பு - பாஜக பிரமுகர்கள் கைது

கோவை கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. செப்டம்பர் 20-ஆம் தேதி காலை பெரியார் சிலை மீது யாரோ மாட்டுச் சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர்.

இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகிய இருவரைக் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.