நூறு நாள் வேலை நிலுவைத்தொகையை வழங்க இரா.முத்தரசன் வலியுறுத்தல்
நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர் களுக்கான சம்பளத்தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக தருமபுரியில் செய்தி யாளர்களிடம் முத்தரசன் பேசியதாவது: ஒன் றிய அரசால் பல்வேறு பிரச்சினைகள் உரு வாக்கப்பட்டு, மக்கள் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை சீர் குலைக்க பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண் டும் பயனாளிகளின் எண்ணிக்கையை ஏதோ ஒரு காரணம் கூறி குறைத்து வருகிறார். தமி ழகத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தொகை ரூ.4,034 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.1 ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைநகரங்க ளில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற உள் ளது. மேலும், வக்பு வாரிய சட்டத்தில் எதிர்கட்சி கள் கொண்டு வந்த திருத்தங்களை நாடாளு மன்ற கூட்டுக்குழு ஏற்காமல், சட்டத்தை அமல் படுத்த முயற்சிக்கின்றனர். பொது சிவில் சட் டத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். சுங்கச் சாவடிகளை படிப்படியாக குறைத்து, இறுதி யில் சுங்கச்சாவடிகளை இல்லாமல் செய்ய வேண்டும். மாறாக, கட்டணத்தை உயர்த்து வது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதே மாதிரி ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைக ளால் சாதாரண மக்கள் நெருக்கடிக்கு உள்ளா கின்றனர். நகை அடமானக் கடன், விவசாய கடன்களை மீண்டும் புதுப்பிக்க முழுமை யான பணத்தை கட்ட வேண்டும் என வற்பு றுத்துவதை நிறுத்த வேண்டும், என்றார். இந்த பேட்டியின் போது, சிபிஐ மாநில துணைச் செயலாளர் ந.பெரியசாமி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.தேவராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்களன்று, நாமக்கல் – சேலம் சாலை யிலுள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.