பின்னலாடை தொழிலாளர் குறைந்தபட்ச ஊதிய குறைப்பு அரசாணைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பூர், ஜூன் 9 - பின்னலாடை தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதிய திருத் தம் செய்து தமிழக அரசு தொழிலா ளர் துறை வெளியிட்ட அரசா ணைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்தன. இந்த வழக்கை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் பின்னலாடை தொழிலாளர்க ளுக்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்து அர சாணை வெளியிடப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு தொழிலாளர் துறை முன்மொழிந்த ஊதியத்தை குறைத்து பிப்ரவரி மாதம் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இதனால் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய மாத ஊதியத்தில் சராசரியாக ரூ.1700 குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கு திருப்பூரில் சிஐடியு கடும் கண்ட னம் தெரிவித்தது. மற்ற தொழிற் சங்கங்களை கூட்டு சேர்த்து இதற்கு எதிராக, குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தது. எனினும் ஊதிய குறைப்பில் எவ்வித மாற்ற மும் செய்யாத நிலையில், சிஐடியு, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய நான்கு மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டாக சேர்ந்து, குறைந்தபட்ச அரசாணைக்கு எதி ராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கும் உயர்நீதி மன்றம், தொழிலாளர் துறை வெளி யிட்டிருந்த குறைந்தபட்ச ஊதிய திருத்த அரசாணைக்கு இடைக் கால தடை விதித்து ஜூன் மூன்றாம் தேதி உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை பத்தாம் தேதி (இன்று) வருகிறது. தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டு இருக்கும் இந்த குறைந்தபட்ச ஊதிய நிர்ண யிப்பு தவறான முறையில் செய் யப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதி மன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ண யிப்பதில் டாக்டர் ஐக்ராய்டின் வழி முறையை பின்பற்றாமல் உள்ளது. அத்துடன் 15 வது இந்திய தொழி லாளர் மாநாட்டின் (ஐ.எல்.சி.) வழிகாட்டலுக்கும் எதிராக உள் ளது. அண்மையில் கர்நாடக நீதி மன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்புக் கும் முரண்பாடாக உள்ளது என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெருவிக் கப்பட்டது. எனவே இந்த குறைந்தபட்ச ஊதிய கணக்கிட்டு முறையை ரத்து செய்து, புதிய கமிட்டி அமைத்து, சட்ட வழிகாட்டுதல் படி, நியாய மான குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்க வேண்டும் என்று நீதிமன்றத் தில் மேற்கண்ட நான்கு தொழிற் சங்கங்கள் முறையிட்டு இருப்ப தாக சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் திங்களன்று தெரிவித்தார்.