கனமழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஜூன் 16- நீலகிரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்க ளில் மரங்கள் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந் நிலையில் திங்களன்று ஆரஞ்சு எச் சரிக்கை விடப்பட்டது. ஆனால், காலை நிலவரப்படி, அவலாஞ்சி யில் 29 செ.மீ., அப்பர் பவானி 16 செ.மீ., பந்தலுார் 13 செ.மீ., என அதிக கனமழை பதிவாகியுள்ளது. காலை முதல் உதகையில் தொடர் மழை பெய்து வருவதால், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாப் பயணியர் இயற்கை காட்சிகளை ரசித்தனர். கடும் குளி ரால் உள்ளூர் மக்களும் அவதிப்பட் டனர். குன்னுார் பகுதியில், காலை யில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தது. பலத்த காற்றுடன் சாரல் காணப் பட்டது. அதில், வண்டிச்சோலை அளக்கரை சாலையில் திங்க ளன்று காலை மரம் விழுந்தது. தக வலின் பேரில் தீயணைப்புத் துறை யினர் மரத்தை வெட்டி அகற்றி னர். இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பந்தலுார் சுற்று வட்டார பகுதிக ளில், பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், நெலாக் கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் ஆசியா என்பவரின் வீட் டிற்கு அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது. இது குறித்து பகுதி மக்கள் போலீசார் மற்றும் வரு வாய் துறைக்கு தகவல் தெரிவித்த னர். அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு சென்று, அப்பகுதியில் மக் களுடன் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதே போன்று குன்னூர் மஞ்சூர் சாலை யில் காட்டேரி பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அவ்வழி யாக வந்த பிக் அப் வாகனம் மீது விழுந்ததால் வாகனம் சேதமடைந் தது வாகன ஓட்டி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.