கோயம்புத்தூர், பிப்.19- ஆன்லைன் ரம்மி விளையாட்டு மற்றும் அதனால் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டி னால் ஏற்பட்ட மன விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அருகே உள்ள கருப்பராயன் கோவில் வீதி யைச் சேர்ந்தவர் மதன் குமார் (25). இவர் பிஎஸ்சி (ஐடி) முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையில்லாத நிலையில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் ஈடு பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து செல்போனில் மூழ்கி இருந்ததால், கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாட்டால் அவதிப் பட்டு வந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட குறைபாட்டை நினைத்து மனவேதனை யில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத் தில் ஞாயிறன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர், மதன்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசா ரணை நடைபெற்று வருகிறது.
தொடரும் தற்கொலைகள்
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு தமணன்சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் மகாலட்சுமி-முத்து ராமன் தம்பதியினரின் மகன் குணசீலன் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந் துள்ளார். கல்லூரிக்குக் கட்டும் பணத் தைக் கட்டாமல் விளையாட்டில் இழந் துள்ளார். படிப்பைத் தொடர முடியாத அவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதி யில் உள்ள நியூ மாஸ் என்ற உணவகத்தில் கடந்த ஒரு வருடமாகப் பணியாற்றி வந்துள் ளார். சம்பாதித்த பணத்தையும் ரம்மி. விளை யாட்டில் இழந்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 2 லட்சத்தை இழந்த அவர் மதுரை சாத்தமங்க லத்தில் தாம் தங்கியிருந்த வீட்டில் பிப்.6- ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தின் சோகம் மறைவ தற்குள் 13-நாள் இடைவெளியில் கோயம் புத்தூர் மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரு நெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தைச் சேர்ந்த சிவன் ராஜா (34) ஆன்-லைன் ரம்மியில் சுமார் ஒரு லட்சம் ரூபாயை இழந்த நிலையில் விஷம் குடித்து உயிரிழந்தார். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தமிழக அமைச்சர் தெரிவித்த தகவல் அடிப்படையில் ஆன்-லைன் ரம்மிக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 2023-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இதுவரை மூன்று பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்- லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் சட்ட மசோ தாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் நிலையில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.