tamilnadu

ஆளுநர் உரை: அதிமுக புறக்கணிப்பு

சென்னை,ஜன.5- தமிழக சட்டப்பேரவை புதனன்று (ஜன.5) காலை 10 மணிக்கு கூடியது.  ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிக்கத் தொடங் கினார்.  அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்கும் பேரவைத் தலைவர் அனு மதி கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் 5 நிமிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதுவரைக்கும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கையில் அமராமல் நின்றுக்கொண்டே இருந்தனர். பிறகு எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். அவ ருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேர வையைவிட்டு வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனிச்சாமி, “பொங்கல் பரிசுத் தொகை வழங் காதது, அம்மா மினி கிளினிக்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றார்.