tamilnadu

img

கோயம்புத்தூர் செய்திகள்

அரசு அலுவலகங்களில்  பொதுமக்களுக்கு இலவச நீர் மோர்

திருப்பூர், ஏப்.2 – வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது மக்களின் தாகத்தை தணிக்கவும், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் திருப்பூர் மாவட்டத்தில் 20 அரசு அலுவல கங்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் புதனன்று தொடங்கப்பட்டது.  இதன் தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ், இலவச நீர் மோர் வழங்கும் சேவையை துவக்கி வைத்தார். கோடை காலத்தில் பொதுமக்கள் உடலில் நீர்ச் சத்து குறைந்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இதனை  தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல் கின்றனர். அவர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பயன ளிக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் இலவச மாக நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர்  மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் உட்பட மொத்தம் 20 அரசு அலுவலகங்களில் இன்று முதல் இந்த இலவச நீர் மோர் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தானை கோவையில் மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார். உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை பந்தய  சாலை பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர் களது பெற்றோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இந்நிகழ்வில், கலந்து கொண்டு ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார். அதனைத் தொடர்ந்து வாக் கத்தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் சம்பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து  அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட  ஆட்சியர், “ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர் கள் மத்தியிலும் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும்.  இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபிடித் தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை அளிக்கலாம்.  அதனை பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.” என்றார்.