tamilnadu

தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பேருந்து

தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பேருந்து

கோவை, ஜூன் 29- கோவையில் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று, திருச்சியில் இருந்து கோவை நோக்கி 30 பயணி களுடன் ஞாயிறன்று அதி காலை பயணித்தபோது, கரு மத்தம்பட்டி சென்னி ஆண்ட வர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதி யது. இதனால் பேருந்தில் இருந்து புகை எழுந்ததைய டுத்து, 30க்கும் மேற்பட்ட பய ணிகள் அனைவரும் உடனடி யாக இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில், பேருந்தின் பேட்ட ரியில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து, பயணிகள் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.