ஈரோடு, ஜுன் 1- ஓட்டுநர் தினத்தையொட்டி, தமி ழகம் முழுவதும் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் ஓட்டுநர் தினம் உற்சாகமாக கொண்டாடப் பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதியன்று ஓட்டுநர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிஐடியு-வினர் சாலை விதி களை கடைபிடிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு. மருத் துவ முகாம் மற்றும் பொதுமக்க ளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார் பில் ஈரோடு மாவட்டம், சங்கு நகர் ஏஎஸ்கே.பாரத் மஹால் மினி அரங் கில் ஓட்டுநர்களுக்கும், அனைத்து வகை மோட்டார் தொழிலில் பணிபு ரிபவர்களுக்கும், பொது மக்களுக்கும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொதுச் செய லாளர் பி.கனகராஜ் ஒருங்கிணைப் பில் நடைபெற்ற முகாமை மூத்த வழக்கறிஞர் பி.கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். மருத்து வர்கள் ஜி.அரவிந்த், டி.எம்.கௌ ரிசங்கர், ஜி.தமிழரசி ஆகியோர டங்கிய குழுவினர் கண், பல் மற் றும் பொது மருத்துவ சோதனை களை நடத்தினர். சகோதர சங்க நிர்வாகிகள் ப.மாரிமுத்து, நாராய ணசாமி, சங்கரன், கணேசன். பொன்.பாரதி, கண்மணி (எ) ஷேக் தாவூத், வடிவேல், இளங்கோ, தஸ் தகீர், ரமேஷ் மற்றும் சுமார் 150க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங் கத்தினர், சாலைப்போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கத் தினர் சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் இனிப்பு வழங்கி கேக் வெட்டி ஓட்டுனர் தினத்தை கொண் டாடினர். சாலை போக்குவரத்து சங் கம் மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் உதய குமார், பொருளாளர் மகாதேவன், சாலை போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் கேக் வெட்டி ஓட்டுனர் தினத்தை கொண்டாடினர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மோட்டார் இன்ஜினியரிங் தொழி லாளர் சங்க கிளைத் தலைவர் முனி யப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டுநர்கள் அனைவ ரும் சாலை விதிகளை கடைபிடிப் போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஓட்டுநர்களுக்கு இனிப்பு களை வழங்கி கொண்டாடினார் கள். இதில், மோட்டார் இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ், சங்க நிர் வாகிகள் சேகர்.துரைசாமி, அசோக், ராஜி, ரவி, உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர். பள்ளிபாளையம் ஆவத்திபா ளையத்தில் சங்க மாவட்டத் தலை வர் ஆனந்தன் தலைமையில் ஓட்டு நர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதேபோல் ஐந்துபனை, கொக் கராயன்பேட்டை, இறையமங்க லம், சித்தாளந்தூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற் பட்ட இடங்களில் கொண்டாடப்பட் டது. திருப்பூர் இதேபோன்று, ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு காங்கேயம் அரசு பேருந்து பணிமனையில், ஓட்டுநர்களுக்கு சிஐடியு நிர்வாகி கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரி வித்தனர்.