tamilnadu

img

பாதுகாப்பு உபகரணங்கள் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

 கோவை, மே 4- தற்போது பரவி வரும் கொரோனாவிற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், ஊடக துறையினர் மட்டுமே அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தூய்மை பணியாளர்களின் வேலையானது இச்சமயத்தில் முகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. கொரோனா உள்ள இடங்கள் அனைத்திலும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி மருந்துகள் தெளித்தும், அங்குள்ள குப்பைகளை தூய்மை செய்தும் வருகின்றனர்.  இந்நிலையில் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், வைரஸ் தடுப்பு உடைகள் போன்றவை வழங்கப்படவில்லை என்றும், சில இடங்களில் உணவும் முறையாக வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

 இந்நிலையில் உயிரை பணயம் வைத்து கொரோனா உள்ள இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக்கோரி திங்களன்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி கோவையில் சிங்காநல்லூர், லாலி ரோடு போன்ற இடங்களில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.  வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசு கோரிக்கை விடுக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியும், முக கவசங்கள் அணிந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு இதற்கு செவி சாய்த்து முறையான பாதுகாப்பு உபகரணங்களை அளிக்காவிட்டால் இது தொடரும் என்றும் கூறினர்.