அரியலூர், மே 10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 36 தூய்மைப் பணி யாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் அமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர். முன்பிருந்த தனியார் நிறுவனம் (Sumith) சில மாதங்களுக்கு முன்பு வேறொரு தனி யார் நிறுவனத்திடம் (QPMS) ஒப்படைத்து விட்டது. அரசு மருத்துவமனையில் ஒரு மேலா ளர், இரண்டு மேற்பார்வையாளர், 6 காப்பா ளர்கள், ஒரு தோட்டக்காரர், இரண்டு சமைய லர்கள், ஒரு கார்பென்டர், ஒரு பிளம்பர், ஒரு எலக்ட்ரீசியன், 17 ஹவுஸ் கீப்பர் என மொத்தம் 36 பேர் பணியமர்த்தப்பட்டு பணி செய்து வரு கின்றனர். இவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து பணிக்கு செல்லாமல் வேலையை புறக்கணித்து மருத் துவமனை வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்களுக்கு 11, 12 ஆகிய தேதி களில் ஊதியம் வழங்கப்படும் என தனியார் நிறுவனம் பணியாளர்கள் முன்னிலையில் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பினர்.