tamilnadu

img

ஊரடங்கால் வாழ வழியில்லை -பசிக்கொடுமை ;  பொள்ளாச்சியில் பெண்கள் மறியல்

 பொள்ளாச்சி, ஏப்.29- பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில்  ஊரடங்கால் வாழ வழியில்லாமல் பசி கொடுமையால் உயிரிழந்துவிடுவோம் எனக் கூறி பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 கோவை மாவட்டம் ,
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்த்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாவர்கள். தற்போதைய ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்புகளின்றி, உணவின்றி தவித்து வருவதாகவும் ,பட்டினியோடு வாழ்ந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே, இது தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளிடம் உதவி கோரினால், நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி எங்களை புறக்கணிப்பதோடு ஏளனமாக பதிலளிக்கின்றனர். மேலும் நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படுகின்ற அரிசி பயன்படுத்த முடியாம நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதேபோல் , அரசும் அதிகாரிகளும் இப்பகுதி மக்களின் உயிர்களை துச்சமென கருதிவருவதால் தான் இப்பகுதியினை மறந்துவிட்டனர் எனக் கூறி   புதனன்று மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி - திருப்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி காவல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்பேச்சுவார்த்தையில் பொள்ளாச்சி வட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைவருக்கும் கலைந்து சென்றனர்.