tamilnadu

img

சீரான குடிநீர் கேட்டு சிபிஎம் தலைமையில் மறியல்

சீரான குடிநீர் கேட்டு சிபிஎம் தலைமையில் மறியல்

கோவை நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் வெள்ளியன்று பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை உடையாம்பாளையத்தை அடுத்த நஞ்சேகவுண்டன் புதூர் மேல் நிலைத்தொட்டிக்கு பில்லூர் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுவ தில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. 10 நாள், 15 நாளுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படு கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்றக்குழு தலைவர் வி.இராம மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுமதி மற் றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி  குடிநீர் பிரிவு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டனர். இருந்தபோதும், எவ் வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படாமல் இருந்தது. இந்நிலையில், குடி நீர் பற்றாக்குறையின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிய டைந்து வந்தனர். இதனையடுத்து, வெள்ளியன்று, மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி.இராம மூர்த்தி, சுமதி ஆகியோர் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் மேற்கு இடைக்குழு உறுப்பினர்கள் ராமேஷ், சண்முகம், துரைசங்கர் மற் றும் கிளைச்செயலாளர்கள் கனகராஜ், செல்வராஜ், கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் நஞ்சேகவுண்டன் புதூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையறிந்து, காவல்துறை அதி காரிகள் மற்றும் மாநகராட்சி அலுவ லர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உட னடியாக தண்ணீர் திறந்துவிட்டனர். மேலும், பகிர்மான குழாயை தேவை யான அளவிற்கு மாற்றம் செய்வதாக உறுதியளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆதார் சேவைகளை எளிமைப்படுத்த கோரிக்கை நாமக்கல்

, மார்ச் 14- ஆதார் சேவைகளை எளிமைப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்கள் பலர், மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை  அனுப்பியுள்ளனர். அதில், குமாரபாளையம் பகுதியிலுள்ள தபால் நிலையம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவ லகங்களிலுள்ள ஆதார் சேவை மையங்களை பெயர் மாற் றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் செய்வதற்காக நாடி னால், அங்கே பிறப்புச் சான்றிதழ், படிப்பு சான்றிதழ், புகைப்ப டத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவ ணங்கள் வேண்டும் என கூறுகின்றனர். 20, 30 வருடங்களுக்கு முன்பு படித்தவர்களிடம் படிப்புச் சான்றிதழ் கொடுக்கும் போது, புகைப்படம் இருக்காது. 30 வருடத்திற்கு முன் பிறந்த வர்கள் பிறப்புச் சான்றிதழ் அதிக நபர்களிடம் இருக்காது. தற்போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு சார் பில் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், முதியோர், கர்ப் பிணிகள் என பல்வேறு தரப்பினர் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு சார்ந்து  இருக்கும் சான்றிதழ்களை வைத்து, குமாரபாளையம் ஆதார் சேவை சம்பந்தமாக அனைத்து சேவைகளையும் செயல்ப டுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.