tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அவுட்டுக்காய் கடித்து பசு மாடு பலி

மேட்டுப்பாளையம், மே 16– மேட்டுப்பாளையம் அருகே கெம்மாரம்பாளையம் கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற சினை பசு மாடு அவுட்டுக்காய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கெம்மாரம்பாளையம் கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற விவசாயி விவின் பிரசாத்துக்குச் சொந்தமான மூன்று மாத சினை பசு மாடு, வனவிலங்குகளை வேட்டையாட சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடியை (அவுட்டுக்காய்) கடித்ததில் பரிதாப மாக உயிரிழந்தது.  விவசாயி விவின் பிரசாத் இது  குறித்து காரமடை காவல் நிலையத்திலும், வனச்சரக அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். சிறு சிறு இரும்பு ஆணிகள் மற்றும் கற்களை வெடி மருந்துடன் வைத்துத் தயாரிக்கப்படும் இந்த நாட்டு  வெடிகள், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளுக் குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்க ளுக்குள் மறைத்து வைக்கப்படுகின்றன. வனவிலங்கு கள் நடமாடும் பகுதிகளில் வைக்கப்படும் இந்த வெடி களை அவை உணவு என நினைத்து கடித்து உண்ணும் போது வெடித்துச் சிதறுகின்றன. இதன் காரணமாக யானைகள் கூட உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூரமான வேட்டை முறையில், தலை சிதறி இறக்கும் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆவுட்டுக்காய் எனப்படும் இந்த நாட்டு வெடியை தயாரிப்பதும், பயன்படுத்துவ தும் சட்டப்படி குற்றம் என தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பசு மாடு உயிரிழந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப் பட்ட நாட்டு வெடியை தயாரித்து, வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் அதனை வைத்தது யார் என் பது குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விடுதிக்குள் புகுந்து திருட்டு

கோவை, மே 16– கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள இருவேறு ஆண்கள் விடுதிகளில் புகுந்து 13 செல்போன்கள் மற்றும் 3 லேப்டாப்களை திருடிய அடையாளம் தெரி யாத நபரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவி யுடன் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்படுவதால், வெளி மாநி லங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இப்பகுதியில் வாடகை அறைகளிலும், தனியார் விடுதி களிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலை யில், வியாழன்று தனியார் ஐடி பூங்காவுக்கு அருகே உள்ள 2 ஆண்கள் தங்கும் விடுதிகளில், முகத்தை கர்ச்சீப் கொண்டு மறைத்தவாறு மர்ம இளைஞர் ஒருவர் புகுந்து, விலை உயர்ந்த 13 செல்போன்கள் மற்றும் 3 லேப் டாப்களை திருடிச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பொருட்கள் காணாமல் போனதை அறிந்த இளைஞர்கள், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அடையாளம் தெரி யாத நபர் திருட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இதை யடுத்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார், விடுதி களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி,  திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞரை தீவிரமாக தேடி  வருகின்றனர்.

டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி

நாமக்கல், மே 16- நாமக்கல் மாநகராட்சி சார்பில், தேசிய டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய டெங்கு தினம் மே 16 ஆம்  தேதி அனுசரிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் டெங்குவால் பாதிக்கப்படும் அபாயம் உள் ளது. இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி பொது சுகா தார பிரிவு சார்பில், தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், டெங்கு தடுப்பு  மற்றும் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. துப்பரவு அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வக்குமார், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி, உறுதிமொழி ஏற்றல் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றவற்றின் மூலம் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவா?  தண்ணீரை குடித்து காட்டிய மண்டலத் தலைவர், கவுன்சிலர்

ருப்பூர், மே 16 – திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக் கப்பட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர். திருப்பூர் மாநகராட்சி, 6 ஆவது  வார்டு கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 17.50 லட்சம் லிட் டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக திடீரென வதந்தி பரவியது. இதனையடுத்து, பொது மக்கள் நீர்த்தேக்கத் தொட்டி அருகே திரண்டனர். இதனிடையே, புதனன்று இந்த நீர்த்தேக்கத் தொட் டியின் மேல் மதுபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்டதாகவும், மனிதக் கழிவுகளைத் தொட்டியில் கலந்ததாகவும் அங்கு கூடியவர்கள் பேச ஆரம்பித்தனர். முன்னதாக மது  போதையில் நடைபெற்ற தகராறை யொட்டி நிஷாந்த் (19), சஞ்சய் (22) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோ டிய மூன்று பேரைத் தேடி வரு கின்றனர். இந்நிலையில், நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவல் அப் பகுதி மக்களிடையே வேகமாகப் பரவியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நீர்த்தேக்கத் தொட்டி முன்பு ஆவே சமாக திரண்டனர். சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த மாநகராட்சி டேப் ஆய்வாளர் சுகுமார், நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் எது வும் கலக்கப்படவில்லை என்று உறு தியளித்தார். இருப்பினும், பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நீர்த்தேக்கத் தொட்டி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு,  பின்னரே தண்ணீர் விநியோகம் செய் யப்படும், என்றார்.  இதனைத் தொடர்ந்து, 2 ஆவது மண்டலத் தலைவர் தம்பி கோவிந்த ராஜ் மற்றும் 6-வது வார்டு கவுன்சி லர் கோபால்சாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீரில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட வில்லை. நாங்கள் அனைவரும் இதே  தண்ணீரைத்தான் பயன்படுத்துகி றோம். எனவே, பொதுமக்கள் அச்சப் படத் தேவையில்லை. நூறு சதவிகி தம் தண்ணீரில் எந்தவிதமான அசுத் தமும் கலக்கப்படவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களின் நம்பிக் கையை உறுதிப்படுத்தும் விதமாக, நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை மண் டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர் பொதுமக்கள் முன்னிலை யில் குடித்துக் காட்டினர். அத்துடன், நீர்த்தேக்கத் தொட்டிக்கு உரிய பாது காப்பு வழங்கப்படும் என்று உறுதி யளித்தனர். இதனையடுத்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அமைதி யாக கலைந்து சென்றனர். இந்த சம்ப வம் அப்பகுதியில் சிறிது நேரம் பர பரப்பை ஏற்படுத்தியது.

சாலையில் நாற்று நடும் போராட்டம்

கோவை, மே 16– கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் நாகையின் தோட்டம் செல் லும் சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக தார்சாலை செப்பனிடப்படாமல் உள் ளது. இங்கு புதனன்று பெய்த  கனமழையின் காரணமாக சேறும், சகதியுமாக சாலை மாறியது. வாகனங்கள் செல்ல முடியாமலும், நடக்க முடியாமலும் பொதுமக்கள் அவதியுற்றனர். இதனால் ஆவேசமடைந்த பாலு கார் டன், லட்சுமி நகர், லட்சுமி கார்டன் மற்றும் நாகையன் தோட்டத்து பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட் டோர் சாலையில் நாற்று நட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.