tamilnadu

img

முகநூல்மூலம்  திருமணத்தை பதிவிட்ட  தம்பதியினர் -  திருமண செலவுக்கான சேமிப்பை ஆதரவற்றவர்களுக்கு வழங்கல்

 கோவை , ஏப்.26- 
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் கடந்த ஒரு மாதமாகவே அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர். மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்த நிலையில் அரசு அறிவித்துள்ளப்படி திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கொடுக்கபட்டு உள்ளது.இதன் காரணமாக விமர்சையாக  நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பல திருமணங்கள் தமிழகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகின்றன.
கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் பாபு மற்றும் பிரவினா ஆகியோர் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் விருப்பத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஊரடங்கு வெகு குறைந்த அளவிலேயே உறவினர்களுடன் நடைபெற்ற இந்த திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு தயார் செய்யப்பட்ட உணவுகளை காவல்துறையினர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு  குருடம்பாளையம் முன்னாள் தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கினர். 

முன்னதாக , விக்னேஷ் பாபு சிவில் இன்ஜினீயராகவும் - பிரவினா ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள்.  இவர்களின் திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என 25 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து மற்ற அனைவருக்கும் ஷேர் செய்து யூடியூப்பில் அப்லோடு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , திருமணத்திற்கு செய்யப்பட்டு இருந்த காலை உணவை கோவை வடமதுரை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினரிடம் மணக்கோலத்திலேயே சென்று வழங்கினர்.