tamilnadu

img

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குன்னூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு...

உதகை:
குன்னூர் அதிமுக வேட்பாளர் வினோத் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதியன்று தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யவோ வாக்காளர்களை சந்திக்கவோ கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறை இருந்தது. இதை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம்,  குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வினோத் கடந்த திங்களன்று இரவு 9 மணியளவில் தூதூர்மட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இதை அறிந்த திமுகவினர் அங்கு திரண்டு அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துதகவலறிந்த பறக்கும் படையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்நிலை யத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

;