கோயம்புத்தூர், மதுரை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்களாக மாபெரும் வெற்றிபெற்ற பி.ஆர். நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் செவ்வாயன்று புதுதில்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏகேஜி பவனில், பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை நேரில் சந்தித்தனர். அப்போது அவர் இருவருக்கும் இனிப்பு வழங்கியும், இனிப்பு பெற்றுக் கொண்டும் மகிழ்வுடன் வாழ்த்து தெரிவித்தார்.