குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்று வந்த தமிழக அரசு தட்டச்சு தேர்வு ஞாயி றன்று நிறைவுபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந் திரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசு தொழில் நுட்பக்கல்வி துறையின் சார்பில், இளநிலை மற்றும் முது நிலை தட்டச்சு தேர்வுகள் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற் றது. இத்தேர்வில் 35க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங் களிலிருந்து 1455 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் இளநிலை ஆங்கிலம் 592, இளநிலை தமிழ் 351, முதுநிலை ஆங்கிலம் 317 மற்றும் முதுநிலை தமிழ் 194 மாணவ மாண வியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவ, மாணவி யர்கள் வெற்றி பெற, ஸ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனங் களின் முதல்வர் எஸ்.விஜயகுமார் மற்றும் தேர்வு துணை கண் காணிப்பாளர் முத்துவேலம்மை ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர்.