tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கட்டாயப்படுத்தி பராமரிப்புக் கட்டணம் ஆட்சியரிடம் புகார்

ஈரோடு, ஜூன் 9- அடுக்குமாடி குடியிருப்பில் வசிப் போரிடம் மாதாந்திர பராமரிப்பு கட்ட ணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த னர். ஈரோடு மாவட்டம், பவானி வட் டம், மைலம்பாடி அருகே உள்ள கண் ணாங்கரடு பகுதியில் அடுக்கு மாடி குடி யிருப்பு அமைந்துள்ளது. இதில் வசிப்ப வர்கள் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது, நாங்கள் வசித்து வரும்  அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருப் போர் நலச்சங்கம் ஒன்றை தொடங்கி யுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டினரும் மாதந்தோறும் ரூ. 250 பராமரிப்பு கட்டணமாக வழங்க வேண்டும் என கேட்டு கட்டாயப்படுத்தி வருகின்றனர். மறுத்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், வீட்டு பத்திரத்தை வழங்க முடியாது என்றும் மிரட்டுகின்றனர். இங்கு பெரும்பாலும் முதியோர்களும், தினக் கூலி வேலை செய்பவர்களும் மட்டுமே  உள்ளனர். எனவே, கட்டாயப்படுத்தி பராமரிப்பு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மேலும், ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும். அத்துடன் தங்கள்  பகுதிக்கு பேருந்து வசதியும் செய்துதர  வேண்டும் எனக் கேட்டுள்ளனர்

சாதிய வேறுபாட்டை கடைபிடிக்கும் தலைமை ஆசிரியர்

ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை, ஜூன் 9- க.க.சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சாதிய வேறுபாட்டை கடைபிடிப்பதாக கூறி  பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், க.க.சாவடி பகு தியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக உள்ள முரு கன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அங்கு படித்து வரும் பட்டிய லின சமூகத்தை சேர்ந்த மாணவர்களி டம் சாதிய வேறுபாட்டை கடைபிடிப்ப தோடு ஒருமையில் பேசுவதாகவும், பெற்றோர்களையும் ஒருமையில் பேசு வதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த  முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள்  கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர்.  இது குறித்து பேசிய பெற் றோர்கள், எங்கள் குழந்தைகளை அடிக் கடி தலைமையாசிரியர் முருகன் தாக்கு கிறார். சாதிப் பெயரை சொல்லி பேசி வரு கிறார். இது குறித்து கேட்க செல்லும் எங் களையும் நீண்ட நேரம் காக்க வைத்து  வேலை இருப்பதாக சொல்லி அனுப்பி  வைக்கிறார். அதே போல் எங்கள்  சமூக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க  மறுக்கிறார் என தெரிவித்தனர். மேலும் இந்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு  அளித்துள்ளோம். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.

சாலைத் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை, ஜூன் 9- அன்னூர் அருகே சத்தி சாலையில் தாசம் பாளையம் பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பு கள் இல்லாததால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து  சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா செல் லும் வாகனங்கள் இந்த சாலையை அதிகம்  பயன்படுத்துகின்றன. இதனால், தாசம் பாளையம் பிரிவில் வாகன நெரிசல் அதிக ரித்து, விபத்துகளும் பெருகி வருகின்றன. கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு விபத்து கள் நிகழ்ந்தன. முதலில், இரு இருசக்கர வாக னங்கள் மோதிக்கொண்டன. பின்னர், ஆட் டோவும் மற்றொரு இருசக்கர வாகனமும்  மோதிய விபத்து நடந்தது. இந்த விபத்து களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. தாசம்பாளையம் பிரிவில் சாலைத் தடுப்பு கள் (பேரிகார்டு) இல்லாததால், அதிவே கத்தில் வரும் வாகனங்கள் உள்ளூர் மக்க ளுக்கு வழிவிடுவதில்லை. இதனால், மெயின்  சாலையில் இருந்து உட்புற சாலைகளுக்கு அவசரமாகத் திரும்ப முயலும் உள்ளூர் மக் கள் விபத்துகளில் சிக்குவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் உடனடியாக சாலைத் தடுப்புகள் அமைக்கவும், வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.