tamilnadu

img

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் CITU பொது தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து இரண்டு நாட்கள் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள குப்பைகளையும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தியும் தூய்மை பணி செய்தனர்.

 இந்த நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி துவக்கி வைத்தார் மருத்துவர்கள் சதீஷ்குமார் மனோகரன்  CITU பொதுதொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஷானவாஸ் சாமுவேல் ஜின்னா செந்தில் முன்னிலை வகித்தனர்

முன்னதாக தூய்மை பணிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளிடையே ஆரோக்கிய ஜிம் அப்துல் ரஹீம் பொது இடங்களில் தூய்மை பணி செய்வது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தூய்மை பணியின் நிறைவாக தூய்மை பணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை

மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைதலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா மருத்துவர் விஜய் குமரன் கல்லூரி முதல்வர் சுகுணா ஆகியோர் வழங்கினார்கள்

தூய்மைப் பணியில் பங்கெடுத்த மாணவ மாணவிகள் பொது இடங்களில் குப்பைகளை போட மாட்டோம் பொது இடங்கள் தூய்மையாக இருக்க இதுபோன்ற அடிக்கடி பொது இடங்களில் தூய்மை பணியில் பங்கெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் CITU பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சித்திக் குணசேகரன் சன் பீர் அன்சாரி நிஜாமுதீன் ஹபிபுல்லா யாசர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் இரண்டு நாட்கள் அரசு மருத்துவமனையை தூய்மை பணி செய்த கல்லூரி மாணவ மாணவிகளை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சமூக நல அமைப்புகள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்..