கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையையடுத்து கோவையிலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 1480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஆட்சியருடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்புள்ளது.