முதல்வர் மருந்தகங்களில் மருந்துகளை இருப்பு வைக்க வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் இருக்கும் முதல்வர் மருந் தகங்களில் முழுமையான அளவில் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சனி யன்று உடுமலை சின்னவீரன்பட்டி கொங்கு மஹாலில் நடைபெற்றது. இதில், மருந்துகள் இல்லாத நிலையில் துறை அலுவலர்களுக்கு விற்பணை அதிகரிக்க அழுத்தம் தரக் கூடாது. வீட்டு வசதி துறையில் பதிவாளரின் ஆணையை செயல்படுத்திய சார்நிலை பணி யாளர்களாகிய கூட்டுறவு சார்பதிவாளகளின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். 31.3.2025 ஆம் ஆண்டு சரக் கிருப்பு பரிசோதனையை கூட்டுறவு தணிக்கை துறையின் மூலம் உரிய காலத்தில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற் றப்பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் அபி ராமி வரவேற்றார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் இரா. நவநீத கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் விஜயன் வரவு செலவு அறிக்கையை முன்மொழிந்த னர். மாநில செயற்குழு கூட்டத்தை வாழ்த்தி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அம்சராஜ், திருப்பூர் மாவட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலை வர் ராணி மற்றும் கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் வாழ்த்தி பேசினார்கள். முடி வில், கூட்டுறவு சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.