பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் சட்டங்களை அமலாக்க சிஐடியு வலியுறுத்தல்
திருப்பூர், ஜூன் 23 - பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்குவதை தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை கண் காணித்து உறுதிப்படுத்த வேண் டும் என்று சிஐடியு பனியன் தொழிற் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள் ளது. சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத்தின் 39ஆவது தலைமை மகாசபை திங்களன்று திருப்பூர் வி. நடராசன் நினைவரங்கத்தில் நடை பெற்றது. சிஐடியு பனியன் தொழி லாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமை ஏற்றார். துணைச் செய லாளர் ஆ.செல்வன் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடக்க உரை ஆற்றினார். தீர்மானங்கள் இந்த தலைமை மகாசபையில், திருப்பூர் பனியன் தொழிலில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வார விடு முறை, தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில், வேலை செய்வோருக்கு இரட்டிப் புச் சம்பளம், இஎஸ்ஐ., பி.எப்., உள் ளிட்ட சட்ட உரிமைகள், சமூகப் பாது காப்பு அமலாக்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசும், தொழிலா ளர் துறையும் பனியன் தொழிற் சாலைகளில் தொழிலாளர் சட்டங் களை முறையாக அமல்படுத்து வதை உத்தரவாதப்படுத்த வேண் டும், பனியன் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் மாத சம்பளம் வழங்க வேண்டும், திருப் பூரில் 3 லட்சம் தொழிலாளர்கள் இஎஸ்ஐ சந்தாததாரர்களாக உள்ள னர். இங்கு கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது 20 படுக்கைகளுடன் மட்டுமே செயல் படுகிறது. உயர் சிகிச்சைக்கு வரு வோரை கோவைக்கு அனுப்பும் நிலை உள்ளது. எனவே இந்த மருத் துவமனையை அனைத்து வசதிக ளுடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும், ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களுக்கு எதிராக ஜூலை 9 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை பனியன் தொழிலில் வேலை செய்யும் தொழி லாளர்களை முழுமையாகப் பங் கேற்கச் செய்து வேலை நிறுத் தத்தை முழு வெற்றி பெறச் செய் வது என்றும் இம்மகாசபையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பனியன் சங்க நிர்வாகிகள் பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கே. உண்ணிகிருஷ்ணன், பொதுச் செய லாளராக ஜி.சம்பத், பொருளாள ராக கே.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர்களாக எம்.பாண்டியராஜ், கே.சஜினா, ஆர்.மாணிக்கம், எஸ்.சக்திவேல், செயலாளர்களாக பி. சின்னசாமி, ராஜேஷ், ஏ.செல்வன், எம்.துரைமுருகன் மற்றும் நிர் வாகக்குழு உறுப்பினர்களாக 21 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மகாசபை நடைபெற்றபோது வட மாநிலத் தொழிலாளர்கள் 70 பேர் புதிதாக சந்தா கொடுத்து சிஐ டியு உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். பெண் தொழிலாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். தொழிலாளர்களிடம் போராட்ட குணத்தை ஏற்படுத்த வேண்டும் பனியன் தொழிற்சங்கப் பேரவையைத் தொடக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், உலகில் போர் என்பது ஏகாதிபத் திய நாடுகளின் ஆயுத வியாபா ரத்தை பெருக்குவதற்காக நடத்தப் படுவதாகும். அது தொழிலாளர்க ளுக்கும், சாமானிய மக்களுக்கும் எதிரானது. செயற்கை நுண்ணறி வுத் தொழில் நுட்பம் பல்வேறு தொழில்களில் புகுத்தப்படுவதைப் போல பனியன் தொழிலிலும் வரு கிறது. இதனால் தொழிலாளர் வேலையிழப்பைச் சந்திப்பார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போதைய திருப்பூர் பனி யன் தொழில் இல்லை. பனியன் முத லாளிகள் பெரும் வளர்ச்சி பெற்றுள் ளனர். ஆனால் தொழிலாளர் வாழ்க்கையில் அடிப்படை மாற்றம் ஏற்படவில்லை. முன்பு குடும்பத் தில் ஒருவர் வேலை செய்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற முடிந் தது. ஆனால் இப்போது மொத்த குடும்பமும் வேலை செய்து நெருக் கடியை சமாளிக்க வேண்டி இருக்கி றது. எல்லா தொழில்களையும் போலவே காண்ட்ராக்ட் முறை பனியன் தொழிலில் தொழிலாளர்க ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தி வருகிறது. ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் சட்ட உரிமை களை நீர்த்துப் போகச் செய்து முத லாளிகளுக்கு சாதகமாக 4 தொழி லாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட இந்த மண்டலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தில் 65 தியாகிகள் உயிர்த் தியாகம் செய்திருக்கின்ற னர். தொழிலாளி வர்க்கப் போராட் டத்தின் மூலம் தான் உரிமைகளைப் பெற முடிந்தது. இன்றைக்கு தொழி லாளர்களிடம் அத்தகைய போர்க் குணத்தை ஏற்படுத்த வேண்டும். யுத்தமில்லாத உலகத்தைப் படைக் கும் வரை, சுரண்டலற்ற பொது வுடமை சமுதாயம் அமையும் வரை சிஐடியுவையும், அதன் போராட்டத் தையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.