சிக்கய்ய அரசு கலை கல்லூரி திறப்பு விழா
ஈரோடு மாநகரில் அமைந்துள்ள சிக்கய்ய நாயக்கர் அரசு உதவி பெறும் கல்லூரி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக பெயர் மாற் றம் செய்யப்பட்ட நிலையில், சனி யன்று கோலாகலமாக திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் 172-வது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக உரு வெடுத்துள்ள இந்த கல்லூரியை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா தலைமை யில் நடைபெற்ற இந்த விழாவில், பல் வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற னர். விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், “பெரியாருடைய மண்ணில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி பயில் வது, திராவிடத்தின் கனவை நன வாக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்படும்” என்று உறுதியளித் தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சு. முத்துசாமி, “இந்த கல்லூரியை அரசு ஏற்று நடத்தக் கோரிய கோரிக் கையை முதலமைச்சர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இருப்பினும், ஒன் றிய அரசின் ஒப்புதலுக்காக 3 ஆண்டு கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், தற்போது கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்து தரப்படும்” என்று தெரிவித்தார். இந்த விழாவில், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவள்ளி, கல்லூரி கல்வி இயக்கக கோவை மண்டல இணை இயக்குநர் வெ.கலைச்செல்வி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கல்லூரி முதல்வர் திருக்குமரன் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.