கோவை:
கோவையில் அனுமதியில்லாத இடத்தில் பாஜகவினர் திடீரென தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தூண்டும் வகையில் போராட்டம் நடத்தி வரும் இவர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்புகள் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ‘ஆதரவாக’ கோவையில் காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு பாஜகவினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் ஜனநாயக அமைப்புகளின் எவ்வித போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் பாஜக மற்றும்இந்துத்துவ அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி அமைத்து தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதித்து உள்ளது. இந்த போராட்டத்
தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்றஅச்சம் மாநகர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் ந.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், முன்னாள் சட்ட
மன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுகவின் நந்தகோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்இலக்கியன், சுசி.கலையரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கு.இராமகிருட்டிணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், வடிவேல், திராவிடர் தமிழர் கட்சி வழக்கறிஞர் வெண்மணி, திராவிடர் விடுதலை கழகம் நேருதாஸ், மே 17 இயக்கம் சுந்தரமூர்த்தி, ஆதி தமிழர் பேரவை இனியவன், தமிழ் புலிகள் இளவேணிர், தமிழர் விடுதலை கட்சிநவீன், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் தர்ம
லிங்கம், தமிழ் சிறுத்தைகள் கட்சி அகத்தியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் திரண்டனர். இதனையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையர் சுமித்சரணை சந்தித்து மனு அளித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் தலைவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் எனக்கூறி, பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக கூட கடந்த சில வருடங்களாக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். அப்படியிருக்க, மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில், பாஜகவினர் குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதவெறியை தூண்டும் வகையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனகாவல்துறை ஆணையரிடத்தில் தெரிவித்துள்ளோம். ஆணையரும் ஓரிரு நாட்களில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதியளித்துள்ளனர். தவறினால் தோழமைக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.