பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயர்வு
பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெற்றிலையின் விலை உயர் வடைந்து வருவதால், அந்தப் பகுதி களில் வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள பாண்டமங்க லம், பொத்தனூர், வேலூர், அனிச் சம்பாளையம், குப்புச்சிப்பாளை யம், நன்செய் இடையாறு, பாலப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற் றிலை விவசாயம் நடைபெற்று வரு கிறது. இங்கு விளையும் வெற்றி லைகள் கர்நாடகா, கேரளம், குஜ ராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களுக்கு மட்டு மல்லாமல், தமிழ்நாட்டின், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள் ளிட்ட பல்வேறு உள்ளூர் மாவட்டங் களுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இந்நிலையில், பரமத்தி வேலூர் வெற்றிலை ஏல மையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி இளம்பயிர் (104 கவுளி கொண்ட சுமை) – ரூ.8,500, கற் பூரி இளம்பயிர் சுமை – ரூ. 5,000, வெள்ளைக்கொடி முதியம்பயிர் சுமை – ரூ.4,000, கற்பூரி முதியம் பயிர் சுமை – ரூ.1,800 என்ற விலை யில் ஏலம் போனது. இதனைய டுத்து, மேலும் ஒரே வாரத்துக்குள் நடைபெற்ற மற்றொரு ஏலத்தில்: வெற்றிலை வகைகளுக்கு கிடைத்த விலை விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெள்ளைக்கொடி இளம்பயிர் (104 கவுளி கொண்ட சுமை) – ரூ. 10,000, கற்பூரி இளம்பயிர் சுமை – ரூ. 4,000, வெள்ளைக்கொடி முதியம்பயிர் சுமை – ரூ.6,000, கற்பூரி முதியம் பயிர் சுமை – ரூ. 2,200 என விலை உயர்வடைந்தது. இந்த விலை உயர்வு, வெற்றிலை விவசாயி களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங் களாகச் சந்தையில் காணப்பட்ட விலை வீழ்ச்சியின் பின்னர் தற் போது மீண்டும் விலை உயர் வடைந்து வருவது, அந்தப் பகுதி களில் வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், “வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கிறது. பாசன வசதி கள் மற்றும் வரத்து சரியாக இருந் தால் இன்னும் சிறந்த மகசூல் பெற முடியும். தற்போது கிடைக்கும் விலை, செலவினங்களைக் கணக் கில் எடுத்தால் நமக்கு நல்ல லாபத்தை தருகிறது” என்றனர்.