tamilnadu

img

சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

மேட்டுப்பாளையம், மே 2 – மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் வியாழனன்று மாலை சுழன்றடித்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறு முகை ஆகிய பவானி ஆற்றங்கரைப் பகுதிகளில் வாழை விவ சாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது. குறிப்பாக சிறு முகை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நேந்தி ரன், செவ்வாழை, ரோபஸ்டா மற்றும் கதளி போன்ற பல்வேறு ரக வாழை மரங்கள் பயிரிடப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி  அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், வியாழ னன்று மாலை திடீரென வானிலை மாறியது. பலத்த காற்று  வீசத் தொடங்கிய சிறிது நேரத்தில் மழையும் பெய்ய ஆரம் பித்தது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்தது, சூறாவளி போல் சுழன்றடித்ததால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, மூலையூர், லிங்காபுரம், காந்த வயல், உளியூர் மற்றும் அம்மன்புதூர் உள்ளிட்ட கிராமங்க ளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், தண்டு முறிந்து விழுந்தும் சேத மடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் சேதமடைந்த வாழை மரங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத் தைத் தாண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரி விக்கின்றனர். ஒன்பது மாதங்களாகப் பராமரித்து அறுவ டைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில், சூறா வளி காற்றில் வாழை மரங்கள் வீணானது விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை  சீற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

சேலம், மே 2- வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம் ஆத்தூரில் மே 15 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் இயந்தி ரங்கள் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகை யில், வேளாண்மைப் பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம் நடைபெற வுள்ளது. ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 15 ஆம் தேதியன்று இம்முகாம் நடைபெற உள்ளது. வேளாண் இயந்திரங்கள், கருவிகளை பராம ரிக்கும் முறைகளைப்பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்திட வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் வேளாண்  இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவ னங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள் நேரில் கலந்துரையாடிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து  கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேலம், மே 2- தரக்குறைவாக பேசியதால் விவசாயி தற்கொலை செய்து  கொண்ட நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், என  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (55), குடும்பத்துடன் விவ சாயம் மேற்கொண்டு வந்தார். இவர் வாழப்பாடியிலுள்ள ஈக்விடாஸ் என்ற தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஏப்.10 ஆம் தேதி கட்ட வேண்டிய தவணைத் தொகை செலுத்தாமல் விட்டதாக தெரிகிறது. இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் வடிவேல் இல்லத்திற்கு சென்று அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமு டைந்த வடிவேல் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற் கொலை செய்து கொண்டார். விவசாயி உயிரிழப்புக்கு காரண மான தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். விவசாயி வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்து, அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வங்கி நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டுமென, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அமைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. இழப்பீடு வழங்கக்கோரி மனு தற்கொலை செய்து கொண்ட விவசாயி வடிவேலின் குடும் பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வங்கி அதிகாரி கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலை மையில் மனு அளிக்கப்பட்டது.