tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசுப்பள்ளிகளின் நிர்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல், ஏப்.18- நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாக கணக்குகள் தணிக்கை செய்யப்பட் டன. கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கில  வழி கட்டணம், கணினி கட்டணம், மாற்றுச்சான்றிதழ் தேடு  கூலி, சிறப்பு கட்டணம், விளையாட்டு கட்டணம், நன்கொடை  விண்ணப்பம் என 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கணக்கு கள் பராமரிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஆண்டு தோறும் தணிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தணிக்கை  சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் அவற்றை சரிசெய்வதற் கான கூட்டு அமர்வு நடைபெறும். அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 178 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் முதற்கட்டமாக 90 பள்ளிகளுக்கான தணிக்கை பணி கள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  கலையரங்கில், கண்காணிப்பாளர் எம்.விக்டர் பால் தலை மையில் புதன், வியாழனன்று மேற்கொள்ளப்பட்டன. இதில்,  தங்களுடைய பள்ளி சார்ந்த உரிய ஆவணங்களுடன் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தணிக்கை குறித்த விளக்கத்தை அளித்தனர். 

உலக பாரம்பரிய தினம் நீலகிரி மலை ரயிலில் கொண்டாட்டம்

மேட்டுப்பாளையம், ஏப்.18– உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, வெள்ளியன்று நூற்றாண்டுப் பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை, மேட்டுப்பாளையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ரயில் நிலையத்தில் கேக் வெட்டப்பட்டு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு உற்சாகமாகக்  கொண்டாடப் பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. நீலகிரி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி பயணிப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி, உலகின்  பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத் துடன் வருகை தருகின்றனர். இந்த மலை ரயில், கடந்த 1899 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதன்முத லாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப் பட்டது. செங்குத்தான மலை மீது பற்சக்கரம் பொருத்தப் பட்ட தண்டவாளத்தில் நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த ரயில் சேவை பின்னர் உதகை வரை நீட்டிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்தும் தனது பழமையைப் மாறாமல்  இயங்கி வரும் இந்த மலை ரயிலின் சிறப்பைப் போற்றும் வித மாக, கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இதனை  உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. மனித பாரம்ப ரியத்தைப் பாதுகாக்கவும், அதற்காகப் பாடுபடும் அமைப்பு களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டா டப்படுகிறது. இதன்படி, உலக பாரம்பரியச் சின்னமான நீல கிரி மலை ரயிலின் புகழ் பரப்பும் கொண்டாட்டங்கள் நடை பெற்றன. கோடைக்கால சீசனை முன்னிட்டு, வார விடுமுறை நாட்க ளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் வெள்ளியன்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர், நூற்றாண் டைக் கடந்தும் பழமை மாறாமல் இயங்கும் இந்த மலை ரயிலைக் கொண்டாடும் வகையில், மேட்டுப்பாளையம் ரயில்  நிலையத்தில் ரயில்வே துறை சார்பில் கேக் வெட்டப்பட் டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர், மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்ட மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்த னர்.

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை, தமிழ்நாடு முதல்வரிடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.ரேவதியை, வியாழனன்று சந்தித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வாழ்த்து தெரிவித்தார்.

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஏப்.18- நாமக்கல் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 132 கிலோ புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் பறி முதல் செய்தனர். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், தனியார் உணவ கம் அருகில் நல்லிபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வா ளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில், ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 132 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறி முதல் செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்திய ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக, நாமக்கல் கந்து முத்துசாமி தெருவைச் சேர்ந்த பிரவீண்குமார் (21), நல்லிபாளையம் பாரதிதாசன் நக ரைச் சேர்ந்த மெளனீஷ் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.