tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகள் ஆய்வு

ருப்பூர், மே 16- திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், ஹைடெக் நகர் பகு தியில், திருப்பூர் தெற்கு வட்டம், பெருந்தொழுவு திட்டப்  பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களை வெள்ளியன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர்  அன்சுல் மிஸ்ரா பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வட்டம், ஹைடெக் நகர் பகுதியில் 1.73 ஏக்கர் பரப்பளவில் ரூ.45.75 கோடி மதிப்பீட்டில் 8 தளங்கள், 432  வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளன. இக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடும் 400 சதுர  அடி பரப்பளவில் ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை,  வரவேற்பறை மற்றும் குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட  வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் இணைப்பு, கழிவுநீர், மழைநீர் வடிகால் பணிகள்,  தெருவிளக்கு, சாலை வசதி, சுற்றுச்சுவர், மின்தூக்கி வசதி, ஜென்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதி களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர்  அன்சுல் மிஸ்ரா ஆய்வு மேற்கொண் டார். மேலும், திருப்பூர் தெற்கு வட்டம், பெருந்தொழுவு திட்டப்  பகுதியில் ரூ.20.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற  வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பிரதமரின் அனை வருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 4 தளங்கள், 192 வீடுகள்  கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ், செயற்பொறியளார் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம்) செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி

திருப்பூர், மே 16- போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களின் எண் ணிக்கை அறிந்து சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம் படுத்துதல் தொடர்பான திருப்பூரில் வாகன கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாக னங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. சாலை  விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த  கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகு தியாக திருப்பூர் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை துறை சார்பில்  திருப்பூர் காங்கேயம் சாலை, சிடிசி கார்னர்,  நல்லூர், நெருப் பெரிச்சல், பெருமாநல்லூர் நால்ரோடு,  மங்கலம் சாலை உள் ளிட்ட பகுதிகளில் வாகன கணக்கெடுப்பு பணி நடைபெற்று  வருகிறது. இப்பணிக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி  நேரமும் சாலைகளில் வாகன கணக்கெடுப்பு பணி நடை பெற்று வருகிறது. இரு சக்கர வாகனம்,  ஆட்டோ, பேருந்து கள்,  கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் கணக்கெடுக்க படுகிறது. இந்த கணக்கெடுப்பின் அறிக்கைகள் தமிழ்நாடு அர சுக்கு அனுப்பி வைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும்  வாகனங்களின் எண்ணிக்கை குறித்து சாலைகளை விரிவுப டுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற் கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், 7 நாட்களுக்கு இந்த பணிகள் நடை பெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சிபிஎம் கோரிக்கை

அவிநாசி, மே 16- அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று மனு அளித்துள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்காடு கிளைச் செயலாளர் பன்னீர் நக ராட்சி ஆணையரிடம் வெள்ளியன்று அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி நக ராட்சிக்குட்பட்ட முத்து செட்டிபாளையம் பகு தியில் அமைந்துள்ள பொது கழிப்பிடம் பழுத டைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும்  இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே பழுதடைந்த கழிப்பிடத்தை சீர மைக்க வேண்டும். அண்ணமார் கோவில் அருகில் உள்ள வீதியில் காங்கிரட் சாலை சீர மைக்க வேண்டும். சாலைபாளையம் செல் லும் சாலையில் அமைந்துள்ள இடுகாட் டில், புதர் மண்டியுள்ளது, இதனை சீரமைத்து,  சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும், எரி மேடை அமைக்க வேண்டும். பார்க் வீதியில்  அமைந்துள்ள கழிப்பிடம் பூட்டி வைக்கப்பட் டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 18 வார்டுகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை முறையாக  பராமரிக்க வேண்டும். முத்து செட்டிபாளை யத்தில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்  நாட்டப்பட்டு, இன்னும் பணிகள் தொடங்கா மல் உள்ளது. எனவே உடனடியாக பணி களை தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் வேலுச் சாமி, பழனிச்சாமி, சிஐடியு கட்டுமானத் தொழி லாளர் சங்க அவிநாசி ஒன்றியச் செயலாளர் கனகராஜ், வாலிபர் சங்க முன்னாள் ஒன் றியத் தலைவர் பாபு, அவிநாசி வடக்கு கிளைச் செயலாளர் சந்திரன், வாலிபர் சங்க  ஒன்றிய நிர்வாகி வடிவேல், மாதர் சங்க ஒன்றி யத் தலைவர் சித்ரா ஆகியோர் உடன் இருந் தனர்.

குப்பை தொட்டியில் விழுந்து குழந்தை பலி

 திருப்பூர், மே 16-  உத்திரபிரதேசம் மாநி லம், கான்பூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் - காஜல் ஆகி யோர் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியில் உள்ள தனியார் டையிங் காம்பவுண்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் இந்த தம்பதியினரின் மகள் மஹி (1) வெள்ளியன்று காணவில்லை. அப்போது தேடிப்பார்த்த போது காம்ப வுண்டில் இருந்த குப்பை  தொட்டில் மஹி தலைகுப்பிற  கிடந்துள்ளார். உடனடியாக  மஹியை மருத்துவம னைக்கு அழைத்து சென்ற னர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மஹி ஏற்க னவே இறந்ததாக தெரிவித்த னர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். ஒரு வயது பெண் குழந்தை குப்பை தொட்டியில் விழுந்து பலியான சம்ப வம் அப்பகுதியில் பெறும்  சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.