மே 20 ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு
திருப்பூர், மே 16 - பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றி இருக் கும் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முத லாளிகளுக்கு ஆதரவான நான்கு தொழிலா ளர் சட்ட தொகுப்புகளை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி திருப்பூரில் மே 20 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் தலைமையில் சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலை வர் ஜி.சம்பத், ஒய்.அன்பு, ஏஐடியூசி பிஆர். நடராஜன், ரவி எல்பிஎப் மகேஷ்குமார், அறிவழகன் ஐஎன்டியூசி விஆர்.ஈஸ்வரன், ரஜினி, எச்எம்எஸ் ஆர்.முத்துசாமி, கலைச் செல்வன், பல்லடம் முத்துசாமி, எம்எல்எப் சக்திவேல், வெங்கடாசலம், எஐசிசிடியூ கே.முத்துகிருஷ்ணன், யூடியூசி சதீஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதில், தொழிலா ளர் விரோத மோடி அரசு நிறைவேற்றி இருக் கும் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு களை நாடு முழுவதும் அமல்படுத்த துடித்து வருகிறது. இந்திய தொழிலாளி வர்க் கம் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க வும், கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்யவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த தொழிலாளர் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பிக்க கூடாது. அந்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத் திருந்தன. எனினும் நாட்டில் தற்போது நிலவும் நிலை மையை கணக்கில் கொண்டு இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஜூலை 9 ஆம் தேதி நடத்துவது என்று மத்திய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதனை ஏற்று திருப்பூர் சிஐடியு அலுவல கத்தில் வெள்ளியன்று அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜூலை 9ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத் துவது. முன்னதாக மே 20 ஆம் தேதி மோடி அரசு தொழிலாளர் சட்ட தொகுப்பை அம லாக்க கூடாது என்று வலியுறுத்தி திருப் பூர், தாராபுரம், உடுமலை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.