tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கையோடு எடுத்து வந்தவரால் பரபரப்பு

சேலம், ஏப்.22- தன்னை கடித்த பாம்பையும், ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்  சிவப்பிரகாசம். தறித் தொழிலாளியான இவர், பொதுமக்கள்  வீட்டினுள் பாம்பு புகுந்துவிட்டது என்று தெரிவித்தால் பாம் பையும் பிடித்து வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாயன்று தாரமங்கலம் பகுதியிலுள்ள மரக்கடையில் பாம்பு புகுந்து  விட்டதாக சிவப்பிரகாசிற்கு தகவல் அளித்தனர். அதன்பே ரில் அங்கு சென்று பாம்பு பிடிக்க முயன்ற போது கண்ணாடி  விரியன் பாம்பு அவரை கைகளில் கடித்தது. இதையடுத்து, கடித்த பாம்புடன் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற  சிவப்பிரகாசத்தை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். சேலம் அரசு  மருத்துவமனைக்கும் பாம்புடன் சிவப்பிரகாசம் வந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறையின ருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையி னர் கண்ணாடி விரியன் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விடு வித்தனர்.

உடல்நலக் குறைவால் தவிக்கும் காட்டு யானை வனத்துறையினர் தீவிர சிகிச்சை

கோவை, ஏப். 22 – சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட கூத்தாமண்டி அருகே  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை  ஒன்று தனியார் விவசாயத் தோட்டத்தில் தவித்துக் கொண் டிருந்த நிலையில், வனத்துறை மருத்துவக் குழுவினர் அந்த  யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமுகை வனப்பகுதியில் இருந்து இரண்டு நாட்க ளுக்கு முன்பு மூன்று காட்டு யானைகள் உணவு மற்றும்  தண்ணீர் தேடி வெளியேறின. இந்த யானைகள் கூத்தா மண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந் தது. தகவலறிந்து வனத்துறையினர் இரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால், ஒரு ஆண் யானை  திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடக்க முடி யாமல் ஒரு தனியார் தோட்டத்தில் நின்றுவிட்டது. திங்களன்று முதல் அந்த யானை நகர முடியாமல் ஒரே  இடத்தில் நிற்பதை கண்ட சிறுமுகை வனத்துறையினர் உயர்  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்து வக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை பரிசோதித்தனர். யானையின் உடலில் வெளிப் புற காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், உள் உறுப்புக ளில் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்த னர். முதற்கட்டமாக, யானைக்கு வலி நிவாரணி மற்றும்  ஊட்டச்சத்து மருந்துகளை பழங்களில் வைத்து வழங்கினர்.  தற்போது வழங்கப்பட்ட மருந்துகளின் மூலம் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானை யின் உடல்நிலையை முழுமையாக ஆராய்ந்த பின்னரே  மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று வனத்துறையி னர் தெரிவித்தனர்.

மருத்துவக்கல்லூரி மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சேலம், ஏப்.22- சேலத்தில் தனியார் கல்லூரி மாணவன், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியிலுள்ள விநாயகா  மிஷன் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த மாணவன் அனீஸ் என்பவர், மூச்சுத்திணறி இறந்து விட்டதாக ஆட்டையாம்பட்டி காவல்  நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு,  விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த மாணவன்  ஆத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரி யராக பணிபுரியும் வேடியப்பன் என்பவரின் மகன் என்பது  தெரியவந்துள்ளது. மேலம், விடுதியில் தங்கி பயின்ற அனீஸ்,  அதிகளவு உணவு உட்கொண்டதாகவும், இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பிரேத பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவரது  உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனீஸ் உயிரி ழப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி, அவரது உறவினர்கள், நண்பர்கள், அவரது உடலை வாங்க மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அனீஸின் உடலை பெற் றோர்கள் பெற்றுச் சென்றனர்.