கைகளை இழந்தவருக்கு செயற்கை கைகள் பொருத்தி சாதனை
மின் விபத்தில் கைகளை இழந்த பெண்மணி ஒருவருக்கு செயற்கை கைகளை பொருத்தி, இயல்பான நிலைக்கு கொண்டு வந்த கோவை அரசு மருத்துவமனையின் முன்னெடுப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை, சேர்ந்தவர் ருக்மணி (32). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மொட்டை மாடியில் விளை யாடிக் கொண்டிருந்த தனது குழந்தைகளை அழைக்கச் சென்ற போது, உயர் மின் அழுத்த மின்சா ரம் பாய்ந்தது. இதனால் அவரது இரு கைகளும் முட்டிக்கு கீழ் செய லிழந்தன. விபத்துக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, இரு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டது. பிறகு, செயற்கை கைகள் பொருத்த மருத்துவர்கள் ஆய்வு களை மேற்கொண்டனர். காயங் கள் முழுமையாக ஆறிய பின்னர், கடந்த பிப்ரவரி மாதம், மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் ருக்மணி அனுமதிக்கப்பட்டார். முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (prosthetic surgery) மூலம், செயற்கை கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. தொடர்ந்து, “யுனிவர்சல் கப்” எனும் நவீன சுய உதவி சாதனம் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர் பயிற்சியின் மூலம், தற் போது, அன்றாட வீட்டு வேலை களையும் சிறப்பாக செய்து வரு கிறார். வீட்டு தூய்மை பணி செய் யும் அவரது வீடியோ ஒன்று சமீபத் தில் வெளியாகி, பலரையும் கவர்ந் துள்ளது. தமிழகத்தில் செயற்கை கை மற்றும் கால்கள் தயாரிக்கும் தனி குழுவை கொண்ட ஒரே அரசு மருத்துவமனையாக இருக்கும் கோவை அரசு மருத்துவமனை யில், இதுவரை முதல்வர் காப் பீடு திட்டத்தின் கீழ் சுமார் 200 பேருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.