சண்டே ஸ்பெஷல்...
வாலிபால் என அழைக் கப்படும் கைப்பந்து விளையாட்டிற்கு 900 மில்லியன் (90 கோடி) ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்த விளையாட்டில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசிய கண்டத் தில் ஈரான், ஜப்பான் அணிகள் மட் டுமே சிறப்பாகச் செயல்படுகின்றன. முற்காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியக் கைப்பந்து அணி தற்போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் கூட 65-வது இடத்தில் இருக்கும் நிலை யில், இந்திய அணியின் இந்த நிலை மைக்கு முக்கிய காரணம் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத் தாமல் பழங்கால முறையை இன்னும் பின்பற்றி வருவதே ஆகும். பிரே சில், செர்பியா, போலந்து, அமெ ரிக்கா, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கணினி யைப் போல புதிய உத்தியைச் செயல் படுத்தி வெற்றியைக் குவிக்கின்றனர்.
குறிப்பாக பிரான்ஸ் வீரர்கள் சர்வீஸை 130 கிமீ வேகத்தில் விளாசு கின்றனர்.ஸ்பைக் ஷாட்களும் அதற்கு இணையான வேகத்தில் விளாசக் கூடிய அணிகளும் உள்ளன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஆர்வமிக்க நாடான இந்திய அணியோ 110 கிமீ வேகத்தில் தான் அனைத்தையும் செயல்படுத்து கிறது. இது உலக அரங்கில் பயிற்சிக் கான செயல்பாடாகும். புரியும் படி சொன்னால் இந்திய அணி உலக அரங்கில் தற்போது பயிற்சி பெறும் அணியைப் போன்று தான் சுழன்று வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால் சிலர் பயிற்சியாளரைக் கை யைக் காட்டுகின்றனர். ஆனால் இந்தியாவிற்குப் பயிற்சியாளராக இருக்கும் டிராகன் (செர்பியா) மிகுந்த திறமைசாலி. ஐரோப்பா, ஒலிம்பிக் போன்ற சாம்பியன்ஷிப் சாதித்த டிரா கனுக்கு 25 வருட பயிற்சி அனுபவம் உள்ளது. இவரது பயிற்சி சிறப்பா னது தான் என்றாலும் இந்திய வீரர்கள் தான் அதனை செயல்படுத்தத் திணறி வருகின்றனர்.
இந்திய அணியின் பலவீனம்
சர்வீஸ், ஸ்பைக்ஸ் பிரிவுகளில் இந்திய அணி கடுமையாகத் திணறி வருகிறது. மேலும் எதிரணி விளாசும் ஸ்மாஷ்களை தடுப்பதில் இந்திய அணி படு மோசமாகச் செயல்படு கிறது. ஆசியாவில் உள்ள நாடுகளில் ஜப்பான், ஈரான் மட்டுமே உலகத் தரம் என்றாலும் ஆசிய விளை யாட்டுப் போட்டியிலும் தங்கம் வாங் காமல் சொதப்பியது பெரும் அதிர்ச்சி கரமான விஷயம் ஆகும். சமீபத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டி யில் இந்தியக் கைப்பந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென் றாலும் ஆட்டத்திறனில் எவ்வித மேம்பாடும் உருவாகவில்லை. ஜப் பான் ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் இந்தியக் கைப்பந்து அணியின் நிலைமை கவலையளிக்கும் விதத்தில் உள்ளது.
எந்தவொரு விளையாட்டாக இருந்தா லும் நம் முன்னோர்கள் சாதித்தால் தான் அந்த விளையாட்டின் மீது அடுத்த தலை முறைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். இளசு களும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். அதே போலத் தான் தற்போதைய இந்தியக் கால்பந்து அணி ஒலிம்பிக் போன்ற முக்கிய மான தொடர்களில் பதக்கம் வென்றால் மட்டுமே தற்போதைய இளங்கன்றுகள் கைப்பந்தில் ஆர்வம் காட்டுவார்கள். தற்போ தைய நிலையே தொடர்ந்தால் புள்ளிங்கோ முறையைப் பின்பற்ற ஆரம்பித்துவிடு வார்கள். இந்தியக் கைப்பந்து விளை யாட்டும் அழியும் நிலையில் சிக்கும்.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஆடவர் அணிக்கு உரியதாகும். ஆனால் ஆடவர் அணியை விட இந்திய மகளிர் அணி தான் உலக கைப்பந்தில் நல்ல நிலையில் உள்ளது.
கைப்பந்து அனைவரும் விளையாடலாமா?
கைப்பந்து விளையாட்டு மிக எளிதான விளையாட்டு தான். இந்த விளையாட்டிற்கு உடல்வாகு அவ்வளவாகத் தேவையில்லை என் றாலும் குறைந்தபட்சம் 6.4 அடி உயரம் இருக்க வேண்டும். ஸ்லிம் உடல்வாகு இருந்தாலும் 70 கிலோவிற்கு குறையில்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் எதிரணி விளா சும் ஸ்பைக் ஷாட்டை சமாளிக்க முடியும். கண்பார்வை நல்ல நிலையிலிருந்தால் தான் ஸ்பைக் ஷாட்களை நன்றாகக் கவனிக்க முடி யும். கைப்பந்து விளையாட்டில் சர்வீஸ் மற்றும் ஸ்பைக் ஷாட் இரண்டும் முக்கியமானது என்ப தால் உடலில் தசை கடினமாக இருப்பது அவ சியம். இல்லையென்றால் ரத்தத்துடன் தழும்பு உருவாகும். ஆர்வம் இருந்தால் அனைவரும் சாதிக்கலாம்.