திருப்பூர், பிப்.7 – சுயமரியாதையை எப்படி கடைப்பிடிக்க வேண்டும், மற்றவர் கள் சுயமரியாதையை எப்படி மதிக்க வேண்டும் என கற்றுத் தரும் புத்தகங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாச னுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுப்பி வைத்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை யில் வியாழனன்று அமைச்சர் சீனி வாசன் அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அதிகாரத்தோரணை யில் அழைத்து தனது செருப்பைக் கழற்றிவிடும்படி கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அமைச்சருக்கு கடும் எதிர்ப் பைக் கிளப்பிவிட்டது. இந்நிலையில், மாநில அமைச் சரே பழங்குடியின சிறுவனை அவ மதிக்கும் காரியத்தில் ஈடுபட்ட தற்கு கண்டனம் தெரிவித்தும், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சீனிவாசன் பிறரிடம் எப்படி சுய மரியாதைப் பண்பைக் கடைப்பி டிக்க வேண்டும் என கற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில் தந்தை பெரியாரின் புத்தகங்களை அனுப்புவதற்கு முடிவு செய்தனர். வெள்ளியன்று காலை திருப் பூர்- பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் தபால் நிலையத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் இந்த புத்தகங்களை அனுப்பும் போராட் டம் நடைபெற்றது. வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் பா. ஞானசேகரன், மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வாலி பர் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ். அருள், எஸ்.சரவணன் உள்பட பலர் இதில் பங்கேற்று புத்தகங் களை தபால் மூலம் மாநில வனத் துறை அமைச்சர் சீனிவாசனுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தின் நிறை வாக செய்தியாளர்களிடம் பேசிய வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா கூறியதாவது: தீண் டாமை ஒரு பாவச் செயல், ஒரு கொடுங் குற்றம், தீண்டாமை யைக் கடைப்பிடிக்கக் கூடாது என அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர், பழங்குடியினச் சிறுவ னிடம் மிகவும் கீழ்த்தரமாக, அவ மரியாதை செய்யும் வகையில் செருப்பைக் கழற்றி விடும்படி கூறியுள்ளார். எது எதற்கோ பல முறை குனிந்த அமைச்சரால் தனது செருப்பைக் கழற்றக் குனிய முடிய வில்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் மீது காவல் துறையினர் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் சீனிவா சன் சம்பந்தப்பட்ட பழங்குடியின சிறுவனிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட் டால் வாலிபர் சங்கம் வலுவாகப் போராடும் என்றும் தெரிவித்தார்.