tamilnadu

img

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

ஏற்காடு, செப்.2- ஏற்காட்டில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இளைஞர் ஒரு வர் போக்சோ சட்டத் தில் கைது செய்யப்பட் டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற் காடு வேலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு வர் வயிற்று வலி காரண மாக சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இவரிடம் மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மருத்துவமணை ஊழியர்களும், அவரது தாயாரும் விசாரித்ததில், வேலூர் கிராமத்தை சேர்ந்த கரியராமன் மகன் மோகன் என்பவர் அச்சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார், ஏற்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல்துறையினர் மோகனை கைது செய்து விசாரித்ததில் மோகன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;