tamilnadu

டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டல்- வாலிபர் கைது

கோவை, பிப். 12 -  டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியைக் காட்டி மதுபானம் கேட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சவுரிபாளையம் சாலை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், செவ்வாயன்று இவரது கடைக்கு கத்தியுடன் வந்த வாலிபர் ஒருவர்  குடிப்பதற்கு மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு விற்பனையாளர் முருகே சன் பணம் கேட்டதற்கு, பணம் கொடுக்க முடியாதென வாலிபர் தகராறில் ஈடுபட்டுள்ளார் .  இதனையடுத்து முருகேசன் ராமநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கத்தியுடன் இருந்த நபரை கைது செய்து விசாரித்தனர். இவ்விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(25) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜை சிறையில் அடைத்தனர்.

;