tamilnadu

காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக்கொலை அண்ணன் வெறிச்செயல் - கைது

 கோவை, பிப். 12-   காதலை கைவிட மறுத்ததால் காதலி யின் அண்ணன் இளைஞர் ஒருவரை சரமாரி யாக குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து போலீசார் கூறுகையில், கிணத்துக்கடவு அடுத்த தாமரைகுளம் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவரது மனைவி நீலாவதி.  இவர்களுக்கு   மஞ்சு(22), சந்தியா(20) என்ற 2 மகள்க ளும் மணிகண்டன்(18) என்ற மகனும்  உள்ளனர். அதே  பகுதியில்  வசித்து  வருபவர்  கனகராஜ் மகன் தினேஷ்குமார்(23). இரு குடும்பத்தாரும் உறவினர்கள் ஆவார்கள். இந்நிலையில் தினேஷ்குமார், மணி கண்டனின் சகோதரி சந்தியாவை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.  இது மணிகண்டனுக்கு பிடிக்காததால், தினேஷ்குமாரை எச்சரித்துள்ளார். இருந் தும், சந்தியாவிடம் பேசுவதை தினேஷ்கு மார் நிறுத்திக்கொள்ளவில்லை.  இந்நிலையில் செவ்வாயன்று இரவு குடிபோதையில் வந்த மணிகண்டன், தினேஷ்குமாரிடம் தனியாக பேச  அழைத்து  சென்றுள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது இருவர் இடையே தகராறு ஏற்பட்ட தில் மணிகண்டன் கத்தியால் தினேஷ்கு மாரை குத்தியுள்ளார். ஆபத்தான நிலையிலி ருந்த தினேஷ் குமாரை அருகில் உள்ளவர் கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இதனைத்தொ டர்ந்து, மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.