திருமணத்தை பதிவு செய்தது பதிவுத்துறை
கோவை, பிப். 14 - மாற்று பாலினத்தவரை மணமகன், மணமகள் வகைப்பாட்டில் சேர்க்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் திருநங்கை, இளைஞர் திருமணம் செய்து பதிவு செய்து கொண்டனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண் டன்(26). இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்.14 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். இதனி டையே கடந்த ஜன. 21 ம் தேதி இந்து திருமணச் சட்டத்தின் படி தங்களது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மணமகள் தொடர்பாக அச்சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான வகை பாடு இடம் பெறததால் திரும ணத்தை செய்ய சார்பதிவாளர் மறுத்துள் ளார். மேலும் மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் மாறி மாறி இருப்ப தாகவும், இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார்பதிவாளர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் -சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர். இதுதொடர்பாக மாநில பதிவுத்துறை தலைவர் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோ சணை பெற்றுள்ளார். அப்போது இந்து திருமண சட்டத்தில் மூன்றாம் பாலினத்த வரை மணமகன் அல்லது மணமகள் என்ற வகைப்பாட்டின் கீழ் சேர்த்து கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி திருமண பதிவு செய்யவும், மணிகண்டனின் பிறப்பு சான்றிதழ் தேதிப்படி பதிவு செய்ய வும் வடவள்ளி சார்பதிவாளருக்கு கோவை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து வெள்ளியன்று வட வள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் திரு மணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடதக்கது.