tamilnadu

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

கோவை, அக்.19- கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலி பர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி சுப்ரமணியன் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் மனோஜ் குமார் (31).  இவர் அரசு மற்றும் தனியார்துறை பணிக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக  எந்தவொரு  வேலையும்  கிடைக்காததால் மன முடைந்த அவர் ஞாயிறன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனோஜ்குமாரின் தந்தை துரைசாமி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.