ஏற்காடு, பிப். 5- ஏற்காட்டில் உள்ளாட்சி தேர் தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் செவ்வாயன்று தமிழ்நாடு பழங்குடி யின மக்கள் கூட்டமைப்பு சார்பில் உள் ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட் டது. இவ்விழாவிற்கு வட்டாரத் தலை வர் வெள்ளையப்பன் தலைமை வகித் தார். வட்டார பொருளாளர் பூமாலை அனைவரையும் வரவேற்றார். ஏற் காடு ஒன்றிய தலைவர் சாந்தாவள்ளி அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பிணர் புஷ்பராணி ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில், மாநிலத் தலைவர் முருகே சன், மாநில பொதுச் செயலாளர் சத்தி யராஜ், சேலம் மாவட்டத் தலைவர் லட்சுமணன், மாவட்டச் செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பழங்குடி யின பிரதிநிதிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். மேலும், உள்ளாட்சி தேர்த லில் பல்வேறு பதவிகளுக்கு போட்டி யிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக் கப்பட்டது. மேலும், அனுபவ நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு அரசு 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும். நத்தம் கிராமத்தில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். புத்தூர் கிராமத்தில் கட்டி யுள்ள நியாயவிலைக்கடையை அரசு விரைந்து திறக்க வேண்டும், போட்டுக் காடு கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை மூட வேண்டும். வன உரி மைச்சட்டம் 2006 ன் படி நில அனுபவம் செய்து வரும் மக்களை வன அலுவலர் கள் தொந்தரவு கொடுக்க கூடாது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நிறைவாக வட்டாரச் செயலா ளர் ஆண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.