tamilnadu

img

உலக பார்வையிழப்பு தடுப்பு தினம் கடைபிடிப்பு

நாமக்கல், அக்.12- நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நாமக்கல் கிளை  இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், நாமக்கல் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து உலக பார்வையிழப்பு தடுப்பு தின விழிப்புணர்வு மனித சங்கிலி வெள்ளியன்று நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்றது.     இவ்விழிப்புணர்வு நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட இணை இயக்குனர் மரு.சாந்தி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ரங்கநாதன்  நாமக்கல் அரசு மருத்துவமனை  கண்காணிப்பாளர்  மருத்துவர் ஜெயந்தி, மூத்த கண் மருத்துவர் குமணபூபதி,  நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகர்,செயலாளர் பொன்னி பொருளாளர் மனோகரன்,  மாவட்ட மன நல அலு வலர் டாக்டர் குணமணி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.     இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மனித சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பார்வையிழப்பை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தும் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். இந்த  விழிப்புணர்வு நிகழ்வில் கண் மருத்துவர் ரங்கநாதன்  பேசியதாவது, உலகில் 75 சதவிகித பார்வையிழப்பை  முறையான கண் பரிசோதனை மூலம் தடுத்திடலாம்.  சர்க்கரை நோயாளிகள்  வருடத்திற்கு ஒரு முறை கண் களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலில்  உள்ள சிறு, சிறு ரத்த நாளங்களை நேரடியாக பார்க்கக் கூடிய வாய்ப்பு கண்ணில் மட்டும் முடியும். கண்களின் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம்  இருதய நோய், கிட்னி பாதிப்பு முன் கூட்டியே கண்டறிய  முடியும்.  இதனை  ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்து  சிகிச்சை அளிப்பதன் மூலம் நலமுடன் வாழலாம்.    

இதேபோல், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அவர்களின் கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மாறுகண், ஒரு கண்ணில் பார்வை குறைபாடு, பிறவி கண் புரை போன்ற குறை பாடுகளை பள்ளிக்கு செல்லும் முன் கண்டு பிடித்து அவர் களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி  அளிக்கத் தவறினால் அந்த குழந்தையின் கண்கள் சோம்பல்  கண்களாகி விடும். இந்த சோம்பல் கண் நோயக்கு  முறை யான சிகிச்சை எட்டு வயதுக்குள் அளிக்காவிடில் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும். முன் கூட்டியே முறையான சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான பார்வையிழப்பை தடுக்கலாம். இதேபோல் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் கண் நீர் அழுத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  இதன் மூலம் பார்வையை ரகசியமாக திருடும் கிளாக் கோமா என்ற கண் நீர் அழுத்த நோயிலிருந்து தங்களை  காத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.  இந்தி மனித சங்கிலியில் விவேகானந்தா, பி.ஜி.பி  மற்றும் கோகுல் நாத் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒளி விழி பரிசோதகர்கள் இந்திரா, ரமேஷ்,   அமுதவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.